தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

வாழ்க்கை | 40 | கவிதை


+


வாழ்க்கை |    40   |  கவிதை 





 
















வாழ்க்கையின் இல்லற வழியிலும்
வாழ்வில் உடுத்தும் ஆடையிலும்
வாழ்வில் பொன்பொருள் ஆசையிலும்
வாழ்க்கை எளிமையான பாதையாலும்
                                     வாழ்வின் சிறப்பே!
பண்பில் மாறாத பாதையாகவும்
குணத்தில் உயர்ந்த குன்றாகவும்
அன்பில் தெவிட்டா தேனாகவும்
பேச்சில்  இனிக்கும் கனியாகவும்
                             இருப்பது வாழ்வின் சிறப்பே!
இதயத்திற்கு  விசாலகுணம் வேண்டும்
சிந்தைக்கு தெளிவு வேண்டும்
எண்ணத்திற்கு உயர்வு வேண்டும்
செயலுக்கு புதுமை வேண்டும்
                        வாழ்வின் சிறப்பே!
கற்பதில் முயற்சி வேண்டும்
படிப்பதில் ஈர்ப்பு வேண்டும்
எழுத்தில் இலக்கணம் வேண்டும்
இளமையில் அனுபவம் வேண்டும்
                           வாழ்வின் சிறப்பே!
நேர்மை பாதை வேண்டும்
உண்மை செயல் வேண்டும்
பெருமித பண்பு வேண்டும்
முதுமை மதிக்க வேண்டும்
                  வாழ்வின்  சிறப்பே!
வாழ்க்கையில் எளிமையும்
                             இனிமையும்
                             புதுமையும்
                             அனுபவவும்
                             மதிப்பும் என்றும் பேர்செல்லும்
                                                              நிலை பெறுமே....!
🍀🍀🍀🍀🍀🌀🌿💐☘️☘️🌼🌼🍀🏵️🍀🍀🏵️🍀💮☘️







Comments