தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

நம்பிக்கை | 43 | கவிதை

                                      


                                            நம்பிக்கை  | 43 | கவிதை 








       

தங்கம் எவர் அணிந்தாலும்
     மதிப்பு குறைவதில்லை
வெயிலின் ஒளி எதில்பட்டாலும்
     ஒளிதன்மை குறைவதில்லை 
பொன்நிலா ஒளிதரும் எந்தயிடத்திலும்
     அழகுவொளி மறைப்பதில்லை
மழைநீர் பொழிந்த எந்தயிடத்திலும்
      பசுமை தடைபடுவதில்லை
தேவனின் பூமாலை எந்தயிடத்திலும்
      அதீத மதிப்பு குறைவதில்லை.

அன்பால் பிறருக்கு கொடுக்கும் பொருள்
எந்நிலையிலும் பெரும் உன்னத மதிப்பே !
தேவைப்படும் நேரம் கிடைக்கும் பொருள்
பெறுபவரின் உள்ளம் பேரின்பமே!

நம்பியிருந்தோர் கைவிடும் நேரம்
மனம் கலக்கமடைவது இயல்பு
நம்பியிருந்தோர் ஏமாறும் போது
மனம் வருத்தமடைவது இயல்பு

நம்பிக்கை எனும் வேரிலிருந்து
நன்மைகளை பெறுகிறோம் - நாம்
நம்பிக்கை எனும் உறுதியிலிருந்து
நல்வழியை அறிகிறோம் - நாம்

உடல் நலத்திற்கு வெயில் அவசியம்
வாழ்வின் மகிழ்ச்சிக்கு நம்பிக்கை அவசியம்
மனதின் அமைதிக்கு பொறுமை அவசியம்
மனதின் தூய்மைக்கு ஒழுக்கம் அவசியம்

நம்பிக்கை துணிச்சலின் அடையாளம்
நம்பிக்கை முன்னேற்றத்தின் படியாகும்
நம்பிக்கை வெற்றியின் இலக்காகும்
நம்பிக்கை வாழ்வின் மகிழ்ச்சியாகும்
                                                என்பர்!
குழந்தை எழுந்து நடப்பதும்
இளைஞன் அறிவை தீட்டுவதும்
இல்லறத்தான் உயர்வு பெறுவதும்
இல்லறத்தான் சிக்கனம் கடைபிடிப்பதும்
                                         நம்பிக்கையே 
நம்பிக்கையின் மறுபக்கம் முயற்சி
முயற்சியின் மறுபக்கம் குறிக்கோள்
குறிக்கோள் மறுபக்கம் வெற்றி
              நம்பிக்கை எண்ணவழியில்
              முயற்சி செயல்வழியில்
              குறிக்கோள் தைரியவழியில்
              வெற்றி பயணத்தில்
பயணிப்போமாக....என்றும்..!
















Comments