தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

கோணல் | 49 | கவிதை



                        

                                               கோணல்  | 49 | கவிதை

         


 



இயற்கை கோணினால் - இந்த
உலகம் சுற்றுவது நின்றுவிடும்
வளம் கோணினால் - இந்த
வையக செழுமை மடியும்
        கருவறை கோணினால் - அங்கு
        கருவின் உருவகம் சிதையும்
        பள்ளியறை கோணினால் - அங்கு
        படிப்பறிவு சிந்தனை சிதறும்
பெற்றோர் கோணினால் - அங்கு
குடும்பம் சிதைந்து போகும்
இல்லறம் கோணினால் - அங்கு
இன்ப வாழ்க்கை முரியும்
           பிள்ளைகள் கோணினால் - அங்கு
           பேர்சொல்லும் வாரிசு மறையும்
           உறவு கோணினால் - அங்கு
           உதிர்ந்து போகும் உறவு
பணியில் கோணினால் - அங்கு
வேலையில் சீர்மை கெடும்
கடமையில் கோணினால் - அங்கு                                            
கண்ணியம் காற்றில் போகும்
           செயல் கோணினால் - அங்கு
'          கெட்டவை முள்கொடியாக படரும்
           உள்ளம் கோணினால் - அங்கு
           பொய்மை பூச்சூடிக் கொள்ளும்-                        
பெருந்தன்மை கோணினால் - அங்கு
ஆணவம் தலைவிரித்து நிற்கும்
சிந்தை கோணினால் - அங்கு
சிறுமை வந்து சுற்றும்
             முதல்கோணல் செயல்- அங்கு
             முற்றிலும் கோணலாக முடியும்
கோணல் இல்லா மனமாகவும்
                                 கடமையாகவும்
வாழ்வில் பயணித்து வாழ்ந்துவிடு...!







                               
                            
                                      கண்விழியில் நின்றவை       

                   

               











         



















Comments