தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

ஓட்டம் | 66 | கவிதை

                                    


                                                           ஓட்டம்   |  66  | கவிதை 


                 


ஊர்ந்து செல்லும் காலஓட்டத்தில்
உண்மை பொய்மை ஆக்குவதும்
பொய்மை உண்மையாக மாற்றுவதும்

      பொய்மையில் சிலரை கண்ணீர் சிந்தவைப்பதும்
      பொய்முகம் நிறைந்த மாந்தர் கூட்டம்
      வன்மனம் கொண்டு திரியும் கருநிழல்
      வஞ்சம் நிறைந்த இருள்மனம்

கருமணியில் முள்நிறைந்து இருப்பதும்
சொல்நாவில் வசைபாடு நிறைந்தும்
குருதியில் நஞ்சு கலந்திருப்பதும்
சிந்தனையில் கோணல் குவிந்தும்
                             இருக்கும் மாந்தரிடம் !
அன்பின் தன்மை
உயரிய தன்மை
அருள் தன்மை
உண்மை தன்மை பூப்பதில்லையே!
        அன்பின் வழியில்
        உண்மை சொல்லில்
        நேர்மை  செயலில் நின்று
மகிழ்வு பயணமாக பயணிப்போமாக...!





















Comments