தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

புத்தாண்டு | 67 | கவிதை |

                          புத்தாண்டு  |  67  |  கவிதை |

                 


 

நில்லாது சுற்றும் பூமிக்கு
மறைக்காது ஒளிதரும் கதிரவனுக்கு
வேற்றுமை நினைக்காத மழைக்கு
 கண்ணுக்கு புலப்படாத காற்றுக்கு
                             வாழ்நாள் கூடுவதும் !
பொறுமையில் இருக்கும் மண்ணுக்கு
பூஞ்சோலையில் மணக்கும் பூச்செடிக்கு
பழுத்த கனிதரும் மரத்திற்கு
மனம் படைத்த மாந்தருக்கு
                               வாழ்நாள் கூடுவதும்!
புத்தாண்டு நாளாக மகிழ்வதும்
பூரித்து இணைந்து பேசுவதும்
உள்ளத்தில் தேன்வெள்ளமாக ஓடுவதும்
விண்ணில் பூச்சரமாக ஜொலிப்பதும்
                                      புத்தாண்டு நாளே!
வாழ்நாள் கத்திமுனையாக தேய்வதும்                            

வாழ்வில் பழைமை மறைவதும்
வாழ்வில் புதுமை பூப்பதும்
வாழ்வில் நம்பிக்கை துளிர்வதும்
                            புத்தாண்டு நாளே!
இயற்கையின் பசுமையும்,
                           இனிமையும்,
                           இன்பமும் மாற்றமில்லையே!
மனிதனின் சொல்லும்,
                       செயலும்,
                       பண்பு மாற்றமே!
நேர்த்தி பாதையில் 
நிறைவு எண்ணத்தில்
நெறிமுறை வழியில்
பயணிக்க வருவது
       புத்தாண்டு நாளே!

       புத்தாண்டு வாழ்த்துக்கள்...!


















                           கண்விழியில் நின்றவை    



+      







Comments