தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

பொங்கல் | 69 | கவிதை

                                         பொங்கல்  |  69  | கவிதை 

                              





உருண்டோடும் வாழ்க்கை சக்கரத்தில்
இயற்கைக்கு நன்றி செலுத்துவதும்
ஆதவனை ஆராதனைக் காட்டுவதும்
பூமியை தொட்டு வணங்குவதும்
                                      திருநாளே !
தமிழருக்கு பாரம்பரிய விழாவாகவும்
தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடுவதும்
ஆயிரம் வருடமாக கொண்டாடப்படுவதும்
உழவரின் மனதை மகிழ்விப்பதும்
                                       திருநாளே!
தை பிறந்தால் வழிபிறக்கும்
தை பிறந்தால் புத்துயிராக்கும்
தை வந்தால் சுபிட்சமாகும்
தை திருநாள் மங்களநாளாகும்
                                         என்பர்!
தீய பழக்கங்கள் கைவிடுவதும்
தீய எண்ணங்கள் மறப்பதும்
நல்லவை செம்மை படுத்துவதும்
நல்வழி பாதை காட்டுவதும்

வாழ்வில் துன்பங்கள் நீங்கிடவும்                         
வாழ்வில் இன்பங்கள் பெருகிடவும்
இல்லத்தில் தூய்மைப் படுத்திடவும்
இதயத்தில் அறநெறி தழைத்திடவும்

மாந்தர் உள்ளங்கள் புனிதமாக்கிடவும்
மாந்தர் உறவுமுறை வாழ்த்திடவும்
மாந்தர் நட்புமுறை தொடர்ந்திடவும்
மாந்தர் பண்புமுறை வளர்ந்திடவும்
                                    இத்திருநாளே!
                       பொங்கல் தை திருநாளே !
   பொங்கல் வாழ்த்துக்கள்...!

        












 


                         கண்விழியில் நின்றவை    





























































Comments