தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

வாழ்க்கை | 73 | கவிதை

                                         வாழ்க்கை  |  73 | கவிதை 









 பிறரின் நிலையை அறிந்து நடப்பதும்

பிறரின் தேவையை உணர்ந்து பேசுவதும்
பிறரின் துன்பம் நீக்க உதவுவதும்
இரக்கம் மனதில் கொண்டு செயல்படுவதும்
        மலர்போன்று மென்மையான மனிதமனம்
        வாடிவிடாதபடி இதயமாக பேசுவது
                                              கனிவு என்பர்!
இல்லத்தில் மகிழ்வு, அரவணைப்பு இருப்பதும்
கடமையில் நேர்த்தி பாதையில் செல்வதும்
உயர்வு பதவி தேடிவர நடப்பதும்  
வேலை தேடிச் செல்லும் இடத்திலும்
           முத்துபோன்று இருக்கும் மனிதமனம்
           முத்தாக செயல் ஆற்றுவது
                                              பணிவு என்பர்!
இலக்கு நோக்கி நிற்கும் மனம்
இடைவிடா முயற்சி செயலில் இருப்பதும்
நம்பிக்கை விதை ஆழ்மனதில் துளிர்வதும்
நேர்மறை எண்ணம் மனதினில் நிறைந்தும்
             வேர்போன்று உறுதியான மனித மனம்
             திண்ணமாக எண்ணம் வைப்பதும்
                                                  துணிவு என்பர்!
கனிவு
பணிவு
துணிவு பாதையில் பயணித்து
துவழாது பயணிப்போம் இவ்வாழ்க்கையிலே!






























Comments