தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

ஓவியம் | 7 4 | கவிதை

                                                    

                                           



                              ஓவியம்   |  7 4 |  கவிதை  







இயற்கை இறைவனின் ஓவியம்
மேகம் வானத்தின் ஓவியம்
பொன்னிலா ஒளியின் ஓவியம்
மரங்கள் மண்ணின் ஓவியம்
         பூக்கள் கொடியின் ஓவியம்
         கனிகள் மரத்தின் ஓவியம்
         குளுமை காற்றின் ஓவியம்
         நீரோடை நதியின் ஓவியம்
                                             என்பர்!
சுவை கனியின் ஓவியம்
துளிர் செடியின் ஓவியம்
நிழல் மரத்தின் ஓவியம்
பசுமை மலையின் ஓவியம்
         துள்ளிஓடுதல் மானின் ஓவியம்
         தோகைவிரிதல் மயிலின் ஓவியம்
         இனியகுரல் குயிலின் ஓவியம்
         கம்பீரம் சிங்கத்தின் ஓவியம்
வார்த்தை கவிஞனின் ஓவியம்
இசைநயம் இசைஞானியின் ஓவியம்
வண்ணநயம் கலைஞனின் ஓவியம்
கலைநயம் சிற்பியின் ஓவியம்
          குழந்தை தாயின் ஓவியம்
          மனைவி கணவனின் ஓவியம்
          பெண்மை நாணத்தின் ஓவியம்
          மக்கட்பேறு பெற்றோரின் ஓவியம்
 பாசம்  குருதியின் ஓவியம்
அன்பு பந்தத்தின் ஓவியம்
 உறவு பழக்கத்தின் ஓவியம்
 நட்பு தோழமையின் ஓவியம்
           சொல்  வாய்மையின் ஓவியம்
           செயல் உண்மையின் ஓவியம்              

           பண்பு மனிதனின் ஓவியம்
           ஒழுக்கம் நேர்த்தியின் ஓவியம்
ஓவியத்தின் அழகு
கண்ணுக்கு ஈர்ப்பு
ஓவியத்தின் கலைநயம்
சிந்தைக்கு எழுச்சி
                             என்பர்!
ஓவியம் போன்று அழகாக
                                  சொல்லில்
                                  செயலில்
                                  பண்பில் இருந்து
 சீர்மை, மகிழ்வு பெறுவோமாக....!
















கண்ணில் பதிந்தவை 













































Comments