தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

சித்திரை | கோவில் | 75 | கவிதை

                                                

                                                  சித்திரை | கோவில்  | 75  |   கவிதை 

                     









புண்ணிய வசுமதியில் சித்திரை திருவிழா
புன்னகை பூக்களாக தமிழர் கொண்டாடுவது
மங்கள முகமாக மங்கையர் மின்னுவது
மங்கள தீபவொளி இல்லத்தில் ஏற்றுவது
                                         சித்திரை திருநாளே!
வானத்தில் சித்திரை மாத பெளர்ணமியும்
வையகத்தில் சித்திரை தேர் திருவிழாவும்
இறையருள் வேண்டி திருக்கோவில் செல்வதும்
இறைவனை துதித்துப் பாடி மகிழ்வதும்
                                             சித்திரை திருநாளே !
பூஞ்சோலை கனியை பூஜித்தும்
பூமலர் பூசித்து போற்றியும்
காலகணிப்பு வாசித்து, கேட்டும்
காலதேவன் வரவை அறிவதும்
                                  சித்திரை திருநாளே!
சித்திரை பெளர்ணமி நிலவு போல
சித்திரை திருவிழா தேர் போல
வாழ்வில் ஒளிமயம் பெற்று
வாழ்வில் திடமனம் பெற்று
                     சீர்மை விருத்தி பெறுவோமாக..!






















Comments