தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

THIRUKKURAL 1330 OVIYANGAL [ Thoorikaikkural-92 ]

                  

                                                  10.இனியவை  கூறல்

                            ( The Utterance of Pleasant Words)

                     


குறள்-92

                     அகன்அமர்ந்து ஈதலின் நன்றே ; முகன்அமர்ந்து

                     இன்சொலன் ஆகப் பெறின்.

                   A pleasant word with beaming smile's preferred,
               Even to gifts with liberal heart conferred.

 விளக்கம்:
                   
                   முகமலர்ச்சியோடு இன்சொல் கூறுதல், மனமகிழ்ந்து கொடுக்கும்                                      கொடையை விட சிறந்தாகும்.

                   Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a                       joyous mind.

பட விளக்கம்:

                      படத்தில் மனிதனின் முகமலர்ச்சிக்கும், இன்சொல்லுக்கும்-பூக்கள்                        (எ. கா)   கொடையை விட சிறந்தது என்பதை முகமலர்ச்சி, இன்சொல்                              முதலிடம் இருப்பது (எ. கா) ஆகும்.

              The Sweet speech like flowers with a cheerful countenance is better than gifts the               first placerepresents the excellence of sweet speech.




நல்லதை சொல்வதும்
இன்முகமாக இருப்பதும்
நற்செயல் செய்வதும்
நற்பண்பு வளர்ப்பதும்
                        சிறப்பே!
வாழ்க்கையில் இன்னல் விலகி
இல்லறம் மகிழ்வு கலந்திட
ஆழ்மனம் தூய்மை பெற்றிட
என்றும் இன்சொல் பூக்கட்டுமே!

உண்மைச் சொல் அன்பு கலந்தது                               
இன்சொல் நன்கொடையை விட உயர்ந்தது
வறுமை இல்லாது வாழ்விக்கச் செய்வது           
வளமை குறையாது நிலைக்கச் செய்வது                
                                  இன்சொல் வார்த்தையே!
இன்சொல் உண்மை அணிகலன்                                   
இன்சொல் அறத்தை வளர்க்கும்                        
இன்சொல் மனமகிழ்ச்சி கொடுக்கும்.
இன்சொல் நன்மை உண்டாக்கும்

இன்சொல் இனிக்கும் கனிபோன்றது
இன்சொல் மறுபிறவிக்கும் இன்பம் கொடுக்கும்
தீயசொல் கசக்கும் காய்போன்றது
தீயசொல் பேசுவது ஏனோ?

இன்சொல்லால் உறவுகள் மேம்படும்
இன்சொல்லால் நட்புகள் திண்ணமாகும் 
இன்சொல்லால் சமூகம் போற்றும்
இன்சொல்லால் உயிரினம் அரவணைக்கும்
                                                    என்பர்!
இன்சொல் மனதினில் நிறுத்தி
இனிய வாழ்க்கை பயணமாக்கி
                       நிற்போமாக..
                       மகிழ்வோமாக....!


























Comments