தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

ஈர்ப்பு வாசல் | 76 | கவிதை

                                  

                             


                     ஈர்ப்பு வாசல்   |  76   |  கவிதை



 

இயற்கை தேவதை அழைக்குமிடம்
விண்ணைத்  தொடும் மலைவிடம்
வான்மேகம் தொட்டு செல்லுமிடம்
பசுமை சூழ்ந்த இயற்கையிடம்
                                    மலைவாசலே!
அமைதி காற்று தவழுமிடம்
அழகிய மரங்கள் வணங்குமிடம்
அன்பின் பூக்கள் வரவேற்குமிடம்
அன்பின் மழைபொழிவு தருமிடம்
                                   பசுமை வாசலே!
பூந்தோட்டம் கண்ணை ஈர்ப்பதும்
வண்ணமலர் இதயத்தை தாலாட்டுவதும்
பனிபொழிவு உடமை பொழிவாக்குவதும்
பனிமலர் மணம் மயக்குவதும்
                                        குளுமை வாசலிலே!
நிலமகள் புன்னகை செய்வதும்
வான்மகள் நெஞ்சம் மகிழ்வுதருவதும்       

நீரோடை முத்தாக சிரிப்பதும்
நெடிய மரங்கள் நிழல்தருவதும்
                                     ஈர்ப்பு வாசலிலே!
மாந்தர் அமைதி தேடுவதும்
மாந்தர் மகிழ்வு பெறுவதும்
இருமனம் இனிமை கொள்ளுவதும்
இராயிரம் உள்ளம் மகிழ்வதும்
                                   இன்ப வாசலிலே!
வானுயர்ந்த மலைபோல நல்லெண்ணமும்
பசுமையின் நிறைவுபோல நற்சொல்லும்
வண்ண பூக்கள்போல நற்செயலும்
                                             செய்து
          மலைவாசல் இதயமாக இருபோமாக...!            
























































Comments