தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

இல்லறம் - 99

                                                             இல்லறம் - 99

               


மனிதன் நிதானம் தேடுவதும்
மனிதன் ஆரோக்கியம் பெறுவதும்
வாழ்க்கைச் சக்கரம் சுழழுவதும்
வாழ்க்கையின் ஒளிபாதை காட்டுவதும்
                                  இல்லறம் என்பர்!
அன்பை பகிர்ந்து கொள்வதும்
ஆனந்தக் கண்ணீர் பொழிவதும்
மங்கள தீபவொளி ஏற்றுவதும்
மங்கையர் முகமலராக நிற்பதும் 
                            இல்லறம் என்பர்!
மனங்கள் இணைவு கொடிபடருமிடம்
மலர்மொட்டு தாலாட்டு கேட்குமிடம்
பிஞ்சுமுகம் தவழ்ந்து விளையாடுமிடம்
பெருமையின் முத்திரை பதியுமிடம்
                                 இல்லறம் என்பர் !
உயரிய அந்தஸ்து அமைவிடம்
உழைப்பால் ஓய்வு பெறுமிடம்
உறவுகள் கூடிவந்து பேசுமிடம்
நட்புகள் சூழ்ந்து உதவுமிடம்
                      இல்லறம் என்பர்!
இல்லற வழியில் நின்று
நல்லறம் பின்பற்றி வாழ்ந்து
சான்றோரின் சொல்லில் நடந்து
அருளொளி வாழ்வில் பெற்று
        இனிய பயணமாக பயணிப்போமாக...!





Comments